jkr

Thursday, November 12, 2009

உங்கள் கணினி அடிக்கடி உறைந்து போகிற்தா?

1 கணினியில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். திடீரென்று கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இய்க்கமேது மற்று உறைந்து (freeze) விடுகிறது அல்லது நீல்த் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழைச்ச் செய்திகளைக் காண்பிக்கிறது.. இந்த இரு வகையான் சிக்களும் எல்லாக் கணினிப் பயனர்களும் வழமையாக எதிர் கொள்பவைதான்.

இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவை தான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்க லாம்.

கணினி உறைந்து விட்டது என்பதை விண்டோஸ் இயங்கு தளம் பலவாறு திரையில் காண்பிக்கும். இவற்றுள் ஒரு எப்லிகேசன் நம் விருப்பப்படி செயற்படாமால் போவது ஒரு பொதுவான் அறிகுறியாகும். எப்லிகேசன் விண்டோக்கள் மினிமைஸ் செய்ததுபோல் டாஸ்க் பாரில் ஒட்டிக் கொண்டிருக்கும். ம்றுபடி முன்ன்ர் இருந்த நிலைக்கு விண்டோவைக் கொண்டுவர முடியாமலிருக்கும். மவுஸ் பொயிண்டர் நகராமல் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதுவும். கணினி உறைந்து விட்டது என்பதை வெளிப்படுதும் ஒரு முக்கிய அறிகுறி

outlook-not-responding

சில வேளைகளில் This program performed an illegal operation and will be shut down அல்லது இந்த எப்லிகேசன் செயற்பட மறுக்கிறது (Not Responding) போன்ற பிழைச் செய்திகளைக் விண்டோஸ் காண்பிக்கும். ஒரு எப்லிகேசன் செய்ற்பட மறுப்பதை விண்டோஸ் இவ்வாறு பல வழிகளில் காண்பிக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக் அந்த எப்லிகேசனை நிறுத்தி விடுமாறு அல்லது கணினி தானாக் அந்த எப்லிகேசனை மறுபடி ஆரம்பிக்கும் வண்ணம் கேன்சல் செய்து விடுமாறு விண்டோஸ் பரிந்துரைக்கும்.

நீலத் திரை மரணம் (blue screen of death) என்பது ஒரு வெளிப்படையான அறிகுறி. நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் சில பிழைச் செய்திகளைக் காண்பிக்கும். இந்த நிலையை crash க்ரேஷ் எனப்படுகிற்து..

task

.குறைபாடுகளுள்ள் அல்லது ஒன்றோடொன்று ஒத்திசையாத வன்பொருள் சாதனங்கள், இயங்கு தளம், எப்லிகேசன் மென்பொருள் மற்றும் ட்ரைவர் மென்பொருள் போன்றவற்றில் ஏற்படும் வழுக்கள். மற்றும் கணினி நினைவகத்தில் ஏற்றப்படும் அதிக சுமை என்பன கணினி க்ரேஷ் ஆவதற்கும் ப்ரீஸ் ஆவதற்கும் முகிய காரணங்களாகும்.

இவற்றுள். நினைவகத்தில், அதிக சுமை ஏற்றுவது பொதுவானா ஒரு காரணியாகும். கணினி செயற்பட, போதுமான அளவு நினைவகம் அவசியம். இதனை RAM ரேம் அல்லது Random Access Memory எனப்படும்.. கணினி ஒரு நேரத்தில் கையாளக் கூடிய அளவை விட மேலதிகமாக் சுமை ஏற்றும்போது கணினி தற்காப்பு நடவடிகையாக க்ரேஷ் ஆகி விடுகிறது., ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படுவதே இவ்வாறு கணினி உறைந்து விடுவத்ற்கான பொதுவான் காரண்மாகும். அதனால் நீங்கள் பயன் படுத்தாத எப்லிகேசனை நிறுத்தி விடுவது கனினியின் நினைவகச் சுமையக் குறைத்து விடும். .

சில எப்லிகேச்ன்களுக்கிடையிலான முரண்பாடுகளும் (Conflicts) கணினி க்ரேஷ் ஆவதற்குரிய மற்றுமொரு காரணமாகும். ஏனைய எப்லிகேசன்களுடன் முரண்படும் மென்பொருள்களில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களும் அடங்கும்.

கணினி எதிர்பாராத் விதமாக் க்ரேஷ் ஆகும்போது கணினியில் இயக்கமே நின்று விடும். கணினியைப் பழுது பார்க்கு முன்னர் கணினி க்ரேஷ் ஆவதற்கான் காரணத்தைக் கண்டு பிடித்துக் கொள்வது நண்மை பயக்கும். அதன் முதல் படியாக கணினியை ரீபூட் (reboot) செய்ய வேண்டும்..கணினி முறையாக் ரீபூட் ஆகுமானால் ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதோ சிக்கலிருப்பது உறுதியாகிறது.. உடனடியாக் ரீபூட் ஆக வில்லையானால் கணினியை சேப் மொடில் (Safe Mode) ரீபூட் செய்து ஒரு ரெஜிஸ்ட்ரி க்லீனர் கொண்டு ரெஜிஸ்ட்ரியைப் பழுது நீக்கிக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஆரம்பிக்கு முன்னர் கீபோர்டில் F8 விசையை அழுத்துவதன் மூலம் கணினியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்ற மெனுவை வரவழைத்து சேப் மோடில் நுளையலாம்..

computer-crash

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் கணினியிலுள்ள ஒவ்வொரு எப்லிகேச்னுக்குமுரிய கட்டளைகளைக் கொண்டுளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை ரெஜிஸ்ட்ரி பைல்களே கொண்டிருக்கும். இந்த ரெஜிஸ்ட்ரி பைல்கள் பழுதடையும் போது அல்லது இடம் மாறி விடும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் கணிணி தடுமாறுகிரது. இவ்வறான சந்தர்ப்பத்தில் கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இறுதியில் க்ரேஷ் ஆகி விடுகிரது.

சில மென்பொருள்களைப் புதிதாக நிறுவும்போது கூட கணினி க்ரேஷ் ஆகலாம். அப்போது அந்த மென்பொருளை அகற்றி விடுவதே சிறந்த வழி.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் முறையாக செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசனை டாஸ்க் மேனேஜரை (Task Manager) வரவழைப்பதன் மூலம் நிறுத்தி விடலாம். டாஸ்க் மேனேஜரை வரவழைக்க Ctrl + Alt + Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். செயற்பட மறுக்கும் எப்லிகேசன் பெயரை டாஸ்க் மேனேஜர் விண்டோவில் காண்பிக்கும். அதிலிருந்து உரிய எப்லிகேசனை தெரிவு செய்து End Task பட்டனில் க்ளிக் செய்வதன் மூல்ம் நிறுத்தி விடலாம்.

டாஸ்க் மெனேஜர் மூலமாகாவும் உரிய எப்லிகேசனை நிறுத்த முடியாது போனால் டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் நிலையில் மறுபடியும் Ctrl + Alt + Delete விசைகளை அழத்துங்கள். கணினி ரீபூட் ஆக ஆரம்பிக்கும்.

ரீபூட் ஆக வில்லையெனின் க்னினியில் உள்ள Reset பட்டனை அழுத்தி விடுங்கள். அப்படிம் ஒரு பட்டன் இல்லையென்றால் கவலை வேண்டாம். கணினியிலுள்ள பவர் பட்டனை ஐந்து வினாடிகள் தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டேயிருங்கள் கணினி முழுமையாக் சட்டவுன் ஆகிவிடும்.

கணினி க்ரேஷ் ஆவதும் ப்ரீஷ் ஆவதும் தவிர்க்க முடியாதது. அதனால் கணினியில் முக்கியமான பைல்களை அவ்வப்போது நகலெடுத்துப் பாதுகாக்கும் பழக்கத்தை கடை பிடிக்க மறந்து விடாதீர்க்கள்

0 comments:

Post a Comment